இந்திய கடற்படை தினம் : போர் நினைவு சின்னத்தில் மரியாதை

இந்திய கடற்படை தினத்தையொட்டி, சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச் சின்னத்தில் கடற்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்திய கடற்படை தினம் : போர் நினைவு சின்னத்தில் மரியாதை
Published on
இந்திய கடற்படை தினத்தையொட்டி, சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச் சின்னத்தில் கடற்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 1971ஆம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் ஆபரேஷன் திரிசூலம் மூலம் பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com