இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்து 69 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்து 69 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்து 69 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது.
Published on

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 356 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்து 69 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், ஆயிரத்து 45 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 66 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 29 லட்சத்து ஆயிரத்து 908 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 8 லட்சத்து ஆயிரத்து 282 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com