நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 5,85,493 ஆக உயர்வு - சுகாதார அமைச்சகம் தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில்18 ஆயிரத்து 653 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 5,85,493 ஆக உயர்வு - சுகாதார அமைச்சகம் தகவல்
Published on

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 18 ஆயிரத்து 653 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 507 பேர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரத்து 157 பேர் நேற்று மட்டும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 5 லட்சத்து 85 ஆயிரத்து 493 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 47 ஆயிரத்து 979 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 2 லட்சத்து 20 ஆயிரத்து114 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 17 ஆயிரத்து 400 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com