

வருமான வரி தாக்கல் செய்யும் போது, ITR படிவத்தில் மேற்கொள்ளப்படும் சிறு தவறுகளுக்கும், சந்தேகத்தின் பெயரில் வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தவறான தகவல்களை கொடுத்தால், அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, ITR படிவத்தில் மேற்கொள்ளப்படும் சிறு தவறுகளுக்கும் சந்தேகத்தின் பெயரில் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிகிறது.