"பாக்., ஆயுதங்களுக்கு IMF நிதி.." கொந்தளித்த காஷ்மீர் CM உமர் அப்துல்லா
“பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் - போர் எப்படி தணியும்?“ ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச், உரி, தாங்தார், ராஜோரி உள்ளிட்ட பல இடங்களை அழிக்கப் பயன்படுத்தும், அனைத்து ஆயுதங்களுக்கும் பாகிஸ்தானுக்கு, சர்வதேச நாணய நிதியம் (The International Monetary Fund - IMF) நிதி அளிக்கும் போது, துணைக் கண்டத்தில் தற்போதைய பதற்றம் எவ்வாறு தணியும் என "சர்வதேச சமூகம்" நினைக்கிறது என்று தனக்கு தெரியவில்லை என ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்தது குறித்து, ஜம்மு காஷ்மீர் முதல்வர் இந்த கருத்தை கூறியுள்ளார்.
Next Story