"குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை லைசென்ஸ் ரத்து" உச்சநீதிமன்றம் அதிரடி

x

மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவான விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் நாடு முழுவதும் குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்குகளின் நிலை என்ன? என்பது குறித்து உயர் நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்