#breaking || ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரம்- கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

#breaking || ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரம்- கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Published on

ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான வழக்குகளை பரிசீலிக்க சிறப்பு அமர்வு அமைக்கப்படும் என்று இன்று காலை தற்காலிக தலைமை நீதிபதி முகமது முஷ்டாக் அமர்வு அறிவித்தது. பெண் நீதிபதி இருப்பார் என்று கூறப்பட்டது.

இதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற பதிவாளர் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்தார்.

திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதையடுத்து, 14 பிரபலங்கள் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர்.

ஹேமா கமிட்டி அறிக்கையை சிபிஐ விசாரிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பைக்கார நவாஸ் தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்கும் போது புதிய பெஞ்ச் அமைக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹேமா கமிட்டியின் விரிவான அறிக்கையை செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்று புதிய பெஞ்ச் வழக்கை விசாரிக்கும்.

X

Thanthi TV
www.thanthitv.com