நேபாள நாட்டில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு... ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு

கனமழை காரணமாக நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாள நாட்டில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு... ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு
Published on

நேபாள நாட்டில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு... ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு

கனமழை காரணமாக நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். மனாங், சிந்துபால்சோக் ஆகிய இரு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம், மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 16 பேர் உயிரிழந்த நிலையில், 22 பேர் மாயமாகியுள்ளனர். மேலும், போக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அவதியுறுகின்றனர். வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை ஹெலிகாப்டர் மூலம் நேபாள நாட்டு ராணுவ வீரர்கள் மீட்டனர். அவர்கள் அனைவரும் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com