"மெத்தனாலை பயன்படுத்தி கை சானிடைசர்கள் உற்பத்தி" - இன்டர்போல் தகவலை தொடர்ந்து சிபிஐ எச்சரிக்கை

"மெத்தனாலை பயன்படுத்தி கை சானிடைசர்கள் உற்பத்தி" - இன்டர்போல் தகவலை தொடர்ந்து சிபிஐ எச்சரிக்கை

கை சானிடைசர்களை உற்பத்தி செய்ய, பிறநாடுகள் மெத்தனால் பயன்படுத்துவதாக, சிபிஐ எச்சரித்துள்ளது.
Published on
கை சானிடைசர்களை உற்பத்தி செய்ய, பிறநாடுகள் மெத்தனால் பயன்படுத்துவதாக, சிபிஐ எச்சரித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க கை சானிடைசர்களை இறக்குமதி செய்ய பல நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதை பயன்படுத்தி, போலி கை சானிடைசர்கள் தயார் செய்ய சில நாடுகள் மெத்தனால் பயன்படுத்துவதாக, இன்டர்போலிடமிருந்து தகவல்கள் வருவதாக சிபிஐ எச்சரித்துள்ளது. மெத்தனால் மனித உடலுக்கு மிகவும் நச்சுத்தன்மை மற்றும் ஆபத்தானது என்பதால், இதில், மிகுந்த கவனம் தேவை என்று, சிபிஐ அறிவுறுத்தியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com