

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பூமி கண்காணிப்புக்காக ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்திருந்தது.
2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தி வியாழக்கிழமை அதிகாலை 5.43 மணிக்கு விண்ணுக்கு ஏவ திட்டமிட்டது.
அதன்படி, 14 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்ததும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில், 2-வது ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.