``பூமிக்குள் இருந்து வந்த தங்கம், வெள்ளி?’’ - கூட்டம் கூட்டமாக படையெடுத்த மக்கள்
பழங்கால பானையில் புதையல்? - கூட்டம் கூடியதால் பரபரப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் கிடைத்த பழங்கால பானையில் தங்கம் இருப்பதாக தகவல் பரவியதை தொடர்ந்து ஏராளமானோர் திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது. ராஜஸ்தான் மாநிலம், டோங்க் பகுதியில் பள்ளம் தோண்டும் பணியின்போது, பழங்கால பானை ஒன்று கிடைத்துள்ளது. பானை முழுவதும் தங்கம், வெள்ளி இருப்பதாக தகவல் பரவியதை தொடர்ந்து, அதனை எடுக்க ஏராளமானோர் குவிந்தனர். இதனை அடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
Next Story
