ஓட்டப் பந்தயம் வேண்டாம், கம்பாளாவே போதும் - மத்திய அரசின் வாய்ப்பை நிராகரித்த மின்னல் வீரன்

கம்பாளா பந்தயத்தில் பங்கேற்று உசேன் போல்டை விட வேகமாக ஓடிய வீரர் என்ற புகழப்பட்ட சீனிவாச கவுடா ஒட்டப் பந்தய போட்டியில் பயிற்சி பெற மறுத்துவிட்டார்.
ஓட்டப் பந்தயம் வேண்டாம், கம்பாளாவே போதும் - மத்திய அரசின் வாய்ப்பை நிராகரித்த மின்னல் வீரன்
Published on
கம்பாளா பந்தயத்தில் பங்கேற்று உசேன் போல்டை விட வேகமாக ஓடிய வீரர் என்ற புகழப்பட்ட சீனிவாச கவுடா, ஒட்டப் பந்தய போட்டியில் பயிற்சி பெற மறுத்துவிட்டார். அன்மையில் மங்களூரு அருகே நடைபெற்ற கம்பாளா போட்டியில் எருமை மாடுடன் ஓடிய சீனிவாச கவுடா, உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்தாக புகழப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு ஓட்டப் பந்தயத்தில் பயிற்சி வழங்க மத்திய அரசு முடிவு எடுத்தது. எனினும் இந்த வாய்ப்பை சீனிவாச கவுடா நிராகரித்துவிட்டார். கம்பாளா போட்டியும், ஓட்டப்பந்தயமும் வெவ்வேறு விளையாட்டு என்றும், தமது பாரம்பரிய விளையாட்டில் தான் கவனம் செலுத்துவேன் என்றும் கவுடா கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com