வேகமெடுக்கும் பூஞ்சை நோய் தொற்று - 16 பேருக்கு தொடர் சிகிச்சை

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேகமெடுக்கும் பூஞ்சை நோய் தொற்று - 16 பேருக்கு தொடர் சிகிச்சை
Published on

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் . கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு வழங்கப்படும் லிபோசோமால் ஆம்போடெரிசின் மற்றும் ஆம்போடெரிசின் ஆகிய இரண்டு மருந்துகளும் முழுமையாக தீர்ந்து விட்டதாக கூறப்படும் நிலையில் சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது,. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் இதுவரை மருந்து வந்து சேரவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com