புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமன் உடல், முழு அரசு மரியாதையுடன் ஆலத்தூர் கிராமத்தில் நல்ல அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஆர்.வி.ஜானகிராமனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமனின் மறைவையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.