விநாயகர் ஊர்வலத்தின்போது தீ விபத்து-"காந்தாரா" பாடலைப் போல நடனமாட முயன்றபோது விபத்து

விநாயகர் ஊர்வலத்தின்போது தீ விபத்து-"காந்தாரா" பாடலைப் போல நடனமாட முயன்றபோது விபத்து
Published on

ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தில், காந்தாரா பட பாடலைப் போன்று நடனமாட முயன்றபோது ஏற்பட்ட தீ விபத்தில் 6 சிறுவர்கள் உள்பட 8 பேர் தீக்காயம் அடைந்தனர். எரகுண்ட்லா அருகே விநாயகர் ஊர்வலத்தில் பஞ்சுருளி வேடம் அணிந்தவர்களை சுற்றிலும் தீ வைத்து நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் தீயில் விழுந்த நிலையில், நடன கலைஞர்கள் இருவர் மீதும் தீப்பற்றியது. இதில், காயமடைந்த 8 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com