விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறது, காங். - ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

விவசாய கடன்கள் தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி, விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறது, காங். - ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி கடும் தாக்கு
Published on
விவசாய கடன்கள் தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி, விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஜெய்ராம் தாகூர் தலைமையிலான பாஜக ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழாவையொட்டி, தர்மசாலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, விவசாய கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியின் மூலம் மக்களை முட்டாளாக்கி வருவதாக குறிப்பிட்டார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் அல்லாத லட்சக்கணக்கானோர் , விவசாய கடன் என்ற பெயரில், பலன் அடைந்ததாக சி.ஐ. ஜி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்ததை பிரதமர் நரேந்திரமோடி, அப்போது நினைவுகூர்ந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com