உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில், வளைவில் வேகமாக வந்த கார் மோதி முதியவர் உயிரிழந்தார். உத்தர பிரதேச பதிவெண் கொண்ட அந்த கார், சாலையில் தறிகெட்டு சென்றதுடன் வளைவில் வேகமாக திரும்பியது. இதனால் முதியவர் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.