பொருளாதாரத்தை மேம்படுத்த தற்போதைய கொள்கை போதாது - பாஜக எம்.பி. சுப்பிரமணிய சுவாமி

இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைக்கு தற்போதைய பொருளாதார கொள்கை போதாது என பாஜகவைச் சேர்ந்த எம்.பி. சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.
பொருளாதாரத்தை மேம்படுத்த தற்போதைய கொள்கை போதாது - பாஜக எம்.பி. சுப்பிரமணிய சுவாமி
Published on

இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைக்கு தற்போதைய பொருளாதார கொள்கை போதாது என பாஜகவைச் சேர்ந்த எம்.பி., சுப்ரமணிய சாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் சமூக வலைதள பதிவில், புதிய பொருளாதார கொள்கையை விரைவில் அமல்படுத்தாவிட்டால், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு விடை கொடுக்க தயாராக வேண்டும் எனக் கூறியுள்ளார். பொருளாதார வீழ்ச்சியை, தைரியம் அல்லது அறிவால் மட்டுமே காப்பாற்ற முடியாது எனக் கூறியுள்ள அவர், இதற்கு இரண்டும் தேவை. ஆனால், இன்று இரண்டும் இல்லை என பதிவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com