ஆக்சிஜன் பற்றாக்குறை எதிரொலி.. இந்திய கடற்படை உதவிக்கரம்

ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக சமுத்ரா சேது திட்டத்தின் இரண்டாம் கட்ட பணியை இந்திய கடற்படை தொடங்கியுள்ளது
ஆக்சிஜன் பற்றாக்குறை எதிரொலி.. இந்திய கடற்படை உதவிக்கரம்
Published on

ஆக்சிஜன் பற்றாக்குறை எதிரொலி.. இந்திய கடற்படை உதவிக்கரம்

ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக சமுத்ரா சேது திட்டத்தின் இரண்டாம் கட்ட பணியை இந்திய கடற்படை தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாக, போர்க் கப்பல்கள் மூலம் ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் அனுப்ப இந்திய கடற்படை முன் வந்துள்ளது. இதன்படி, ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் தர்வார் ஆகிய இரண்டு கப்பல்கள் மூலம் பஹ்ரைனின் மனாமா துறைமுகத்தில் இருந்து மும்பைக்கு ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், ஐஎன்எஸ் பாங்காக், ஐஎன்எஸ் ஐராவத் ஆகிய கப்பல்கள் ஆக்சிஜன் கொண்டுவர சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com