"ஜனவரி முதல் ஆரம்பம்".. சபரிமலை தேவசம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 15-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், உடனடி முன்பதிவு மூலம் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறையின் பரிந்துரைகளை தேவசம் போர்டு பரிசீலித்தது. இதன்படி, வரும் 10-ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங்கை நிறுத்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. மேலும், 15ம் தேதி மகரஜோதி பூஜையை முன்னிட்டு கட்டுப்பாடுக​ள் விதிக்கப்பட்டுள்ளன. 14-ம் தேதி 50 ஆயிரம் பேருக்கும், 15-ம் தேதி 40 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 16ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அதிக பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்