டெல்லி காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள, தங்குமிடம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இரு பிரிவினருக்கு இடையே கல்வீச்சு ஏற்பட்டதை தொடர்ந்து, தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். 5 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.