தமது வெற்றிக்கு காரணம் தீபிகா படுகோன்- கணவரின் புகழாரத்தால் கண்ணீர் விட்ட தீபிகா

கணவர் ரன்வீர் சிங் தம்மைப் புகழ்ந்து பேசியதும், நடிகை தீபிகா படுகோன் கண்ணீர் சிந்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.
தமது வெற்றிக்கு காரணம் தீபிகா படுகோன்- கணவரின் புகழாரத்தால் கண்ணீர் விட்ட தீபிகா
Published on
கணவர் ரன்வீர் சிங் தம்மைப் புகழ்ந்து பேசியதும், நடிகை தீபிகா படுகோன் கண்ணீர் சிந்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற ரன்வீர் சிங் மேடையில் உரையாற்றினார். அப்போது 'பத்மாவத்' படத்தில் வேண்டுமானால், தமது ராணியை இழந்திருக்கலாம், ஆனால் நிஜ வாழ்வில் தமது ராணி தமக்கு கிடைத்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார். குழந்தை போன்ற தீபிகாவை தாம் மிகவும் விரும்புவதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் தாம் சாதித்ததெல்லாம் அவரால்தான் எனவும் புகழ்ந்துரைத்தார். இதைக் கேட்ட தீபிகா கண்ணீர் சிந்தியதும், தம்மை மேலும் அழாமல் கட்டுப்படுத்திய காட்சிகளும் வெளியாகியுள்ளன.
X

Thanthi TV
www.thanthitv.com