ரோட்டோரம் இருந்த உடல்.. கொடூரமாக சிதைக்கப்பட்ட தலை- புதுச்சேரியில் நடந்த பகீர் சம்பவம்

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான சண்முகசுந்தரம் என்பவர், புதுச்சேரியில் தலைசிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த நிலையில், மோப்பநாயின் உதவியால் அருகிலிருந்த காலி மனையில், மதுபோதையில் உறங்கிய ஒரு சிறுவன் உட்பட 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் பேருந்தில் சகபயணியாக வந்த சண்முகசுந்தரத்திடம் போதைப்பொருள் கேட்டு தகராறு செய்ததும், ஆத்திரத்தில் அவரது நிறுத்தத்தில் இறங்கி பின்தொடர்ந்த இருவரும், சண்முகசுந்தரந்தின் தலையில் கல்லைப் போட்டும் கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், சிறுவனை மட்டும் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com