வாராக்கடன்களுக்கு காங். தான் காரணம் - அமித்ஷா

வாராக்கடன்கள் அதிகரித்துள்ளதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு தான் காரணம் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்
வாராக்கடன்களுக்கு காங். தான் காரணம் - அமித்ஷா
Published on

வாராக்கடன்கள் அதிகரித்துள்ளதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு தான் காரணம் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் பாஹாலோடி என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான், தொழிலதிபர்களுக்கு தாராளமாக கடன்கள் கொடுக்கப்பட்டன என்றார். நிரவ் மோடி, மல்லையா உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் ஆட்சியில் தான் கடன் கொடுக்கப்பட்டது என்றார், பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறைக்கு செல்வதற்கு, பயந்து இவர்கள் வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com