உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகாய் : குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழா

உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகாய் : குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழா
Published on

குடியரசு தலைவர் மாளிகையில் தலைமை நீதிபதியின் பதவி ஏற்பு விழா நடந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ரஞ்சன் கோகாய்க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரஞ்சன் கோகாய், 6 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவரது பதவிகாலம் அடுத்தாண்டு நவம்பர் 17ஆம் தேதி வரை உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com