நிலவில் அதிசயம் - விஞ்ஞானிகளுக்கு இன்ப செய்தி கொடுத்த சந்திரயான் - 3
சந்திராயன் 3, நிலவின் மேற்பரப்பின் அடிப்பகுதியில், உறை பனிகள் இருப்பதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இது மட்டுமில்லாமல், அதிக எலக்ட்ரான் அடர்த்தி இருப்பதையும் புதிய ஆய்வில் கண்டறிந்திருப்பதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது பிளாஸ்மா இயக்கவியலில், சந்திரனின் மேல் ஓட்டு பகுதியில் காந்தப்புலங்களின் அதிகபடியான பங்கைக் குறிப்பதாக, தெரிவித்துள்ளது. சந்திரனில், ஒரு கன செ.மீ.-க்கு, சுமார் 23,000 எலக்ட்ரான்கள் என வியக்கத்தக்க உயர் எலக்ட்ரான் அடர்த்தியை வெளிப்படுத்தியதாகவும், இது சூரிய ஒளி பக்கத்தில் உள்ளதை விட, கிட்டதட்ட 100 மடங்கு அதிகம் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
