மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
Published on
மத்திய அமைச்சரவையின் வாராந்திர கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வினால், சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள். இதன் மூலம், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு மொத்தம் 10 ஆயிரத்து 186 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com