தெரு நாய்கள் துரத்தியதால் தப்பிக்க முயன்ற நபர்...நொடியில் போன உயிர் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

x

கேரள மாநிலம் கொல்லம் அருகே தெரு நாயின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற இருசக்கர வாகன ஓட்டி மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார். கொல்லம் அருகே புது விலை பகுதியைச் சேர்ந்த நிசார் என்பவர், கடந்த ஒன்பதாம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, தெருநாய் துரத்தியுள்ளது. நாயிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது, மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார். ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், விபத்து ஏற்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்