Anil Ambani | CBI Raid | அனில் அம்பானியை நெருக்கும் CBI - 15 இடங்களில் அதிரடி சோதனை

அனில் அம்பானிக்கு சொந்தமான 15 இடங்களில் சி.பி.ஐ. சோதனை 27 ஆயிரத்து 337 கோடி மோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான 15 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்.ஐ.சி.யில் பெற்ற கடன் தொகையை போலி நிறுவனங்கள் மூலம் ரிலையன்ஸ் குழுமத்தின் பிற நிறுவனங்களுக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வங்கிகள் மற்றும் எல்.ஐ.சி.க்கு 27 ஆயிரத்து 337 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சி.பி.ஐ. 7 வழக்குகளை பதிவு செய்து, 7 பேரை கைது செய்துள்ளது. இந்த நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 15 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com