CBI | மொத்தமாக அம்பலம் - CBI பிடியில் வசமாக சிக்கினார்

மொத்தமாக அம்பலம் - CBI பிடியில் வசமாக சிக்கினார்

#jipmer #cbi சிபிஐ பிடியில் சிக்கிய புதுச்சேரி பல்கலைக்கழக துணைப் பதிவாளர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 40 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில், புதுச்சேரி பல்கலைக்கழக துணைப் பதிவாளர் மீது சிபிஐ அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முரளிதரன் என்பவர், தனது தங்கை மற்றும் உறவினர்களுக்கு ஜிப்மரில் வேலை பெறுவதற்காக, ராஜ்குமார் என்பவரிடம் 40 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் உறுதியளித்தபடி வேலை வாங்கித் தராததால், காவல் மூலமாக விசாரித்தபோது, அந்தப் பணம் ஜிப்மர் பதிவாளராகப் பணியாற்றிய மகேஷ் என்பவரிடம் கைமாறியது தெரியவந்தது. தற்போது புதுச்சேரி பல்கலைக்கழக துணைப் பதிவாளராக உள்ள மகேஷ் மீது சிபிஐ நடத்திய அதிரடி விசாரணையில், அவர் தனது வருமானத்திற்கு அதிகமாக 57.15 சதவீத சொத்துகளைக் குவித்திருப்பது அம்பலமாகியுள்ளது. கணக்கில் காட்டப்படாத 53 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com