மத்திய அரசு அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வில்லை என்றால் மக்களின் நம்பிக்கையை இழக்கும் என பதஞ்சலி அமைப்பின் நிறுவனரான பாபா ராம்தேவ் கூறியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தாமாக முன்வந்து கோவிலை கட்டினால், நீதிமன்றத்தை அவமதித்ததாக அமையும் என்பதால், ஜனநாயக ரீதியாக மத்திய அரசு அவசர சட்டம் இயற்றி விரைவில் ராமர் கோவில் கட்டும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.