Bihar Election | NDA தலைவர்களுக்கு டெல்லியில் தடபுடல் விருந்து

பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்த நிலையில், அதற்காக உழைத்த தலைவர்களுக்கு பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தனது இல்லத்தில் விருந்து வைத்து உபசரித்தார். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அமித் ஷா, பீகார் தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், துணை முதலமைச்சர் சாம்ராட் செளத்ரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். பீகாரில் என்டிஏ கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com