Bihar | Doctor | உடைந்த காலுடன் சென்ற இளைஞர் | அட்டைப்பெட்டியை வைத்து கட்டுப்போட்ட டாக்டர்
Bihar | Doctor | உடைந்த காலுடன் சென்ற இளைஞர் | அட்டைப்பெட்டியை வைத்து கட்டுப்போட்ட டாக்டர்
உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி-மருத்துவமனை மீது சர்ச்சை பிகார் மாநிலத்தில், விபத்தில் காயமடைந்த இளைஞரின் உடைந்த காலுக்கு, பிளாஸ்டர் அல்லது மருத்துவக் கட்டுக்குப் பதிலாக அட்டைப்பெட்டியை வைத்து கட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெகுசராய் மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட இளைஞருக்கு, அட்டைப்பெட்டியை வைத்து கட்டுப்போட்டு, மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த சிவில் அறுவை சிகிச்சை மருத்துவர், உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார். எனினும், இந்தச் சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
