

பெங்களூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம நபர்கள் சிலர் அலுவலகத்தின் கதவு மற்றும் அருகில் இருந்த வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். கேரளாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கார் மீது தாக்குதல் நடந்ததன் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.