மகளின் போக்கில் திடீர் மாற்றம்.. ஆசையாக அழைத்து காதலனுக்கு பெற்றோர் கருமாதி

x

கர்நாடக மாநிலம் கலபுரகியில், மகளின் காதலனை வீட்டுக்கு அழைத்து, குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான அபிஷேக் என்பவரும், அதே பகுதியில், 2-ம் ஆண்டு நர்சிங் மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.

மகளின் போக்கில் மாற்றத்தை கண்ட பெற்றோர், காதல் விவகாரம் தெரிந்த‌தும் பேச வேண்டும் என அபிஷேக்கை வீட்டுக்கு அழைத்துள்ளனர். அங்கு சென்ற அபிஷேக்கை 2 மணி நேரம் இரும்பு கம்பியால் கண்மூடித்தனமாக தாக்கி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அபிஷேக்கை சிலர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அபிஷேக் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அபிஷேக்கின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், சிறுமியின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்