பெங்களுரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த மர்மநபர் : போலீசார் தீவிர விசாரணை

பெங்களுரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த மர்மநபர் தீவிரவாதியாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பெங்களுரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த மர்மநபர் : போலீசார் தீவிர விசாரணை
Published on

பெங்களூருவில் உள்ள முக்கியமான மெஜஸ்டிக் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு வந்த ஒரு மர்மநபரை பாதுகாப்பு ஊழியர்கள் மறித்து சோதனை செய்தனர்.அப்போது எச்சரிக்கை மணி ஒலித்ததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரை மீண்டும் சோதனையிட முயன்ற போது அந்த மர்மநபர் நைசாக நழுவி தப்பி சென்று விட்டார். அவர் தீவிரவாதியாக இருக்க கூடும், ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்த சிசிடிவி வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள்அச்சப்படவேண்டாம் என்று தெரிவித்துள்ள போலீசார், மர்ம நபரை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com