பைசாகி எனப்படும் புத்தாண்டின் தொடக்கம் மற்றும் அறுவடைத் திருவிழாவை முன்னிட்டு, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், திரளான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.