அயோத்தி வழக்கு : முஸ்லிம் தரப்பு வழக்கறிஞருக்கு மிரட்டல்

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
அயோத்தி வழக்கு : முஸ்லிம் தரப்பு வழக்கறிஞருக்கு மிரட்டல்
Published on

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இது தொடர்பான அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான, சண்முகம் தரப்பு வழக்கறிஞர், மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, பேராசிரியருக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. முன்னதாக, அயோத்தி வழக்கில், இஸ்லாமியர்களுக்காக தொடர்ந்து வாதாடினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற வழக்கறிஞர் தவானுக்கு பேராசிரியர் சண்முகம் மிரட்டல் கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com