Arvind Kejriwal | BJP | பாஜக தோற்றால் என்ன நடக்கும்? - காட்டமாக கேள்வி கேட்ட கெஜ்ரிவால்
மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால் என்ன நடக்கும் என டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு அமைப்புகளைக் கட்டுப்படுத்தி, லட்சக்கணக்கான வாக்காளர் பெயர்களை நீக்கிய பிறகும் மோடி தோற்றால் நிலைமை என்னவாகும் என அவர் வினவியுள்ளார். வாக்காளர் பெயர் நீக்கம் தொடர்பாகத் திரிணாமுல் காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டை வழிமொழியும் வகையில் இந்தப் பதிவு அமைந்துள்ளது.
