நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 24 ஆயிரம் - ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

ஆந்திர மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 24 ஆயிரம் - ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
Published on
ஆந்திர மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பேர்னி நானி, கைத்தறி நெசவாளர்கள் குடும்பத்தினருக்கு ஒய்.எஸ்.ஆர் நேசன்னா நெஸ்தம் என்ற திட்டத்தில் ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கக்கூடிய நிதி 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com