பள்ளியில் சண்டையிட்டு கொண்ட மாணவர்கள் - ஆசிட் பாட்டில் கவிழ்ந்து 6 பேர் காயம்

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சிறப்பு வகுப்புக்கு சென்ற பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாததால் சண்டையிட்டு கொண்டனர்.
பள்ளியில் சண்டையிட்டு கொண்ட மாணவர்கள் - ஆசிட் பாட்டில் கவிழ்ந்து 6 பேர் காயம்
Published on
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சிறப்பு வகுப்புக்கு சென்ற பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாததால் சண்டையிட்டு கொண்டனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஆசிட் பாட்டில் கவிழ்ந்து 6 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களது அலறல் சத்தத்தை கேட்ட ஆசிரியர்கள் மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com