ஆந்திரா : பக்தர்கள் சென்ற பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே, லாரி மீது மோதிய பேருந்து தீப்பிடித்து எரிந்த நிலையில், 50 பக்தர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆந்திரா : பக்தர்கள் சென்ற பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசம்
Published on
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே, லாரி மீது மோதிய பேருந்து தீப்பிடித்து எரிந்த நிலையில், 50 பக்தர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். உத்தரகாண்ட் பக்தர்கள், ராமேஸ்வரம் வந்துவிட்டு, திரும்பிச் சென்ற பேருந்து, ஆந்திர மாநிலம், நெலி வாடா அருகே விபத்தில் சிக்கியது. திடீரென குறுக்கே வந்த பேருந்தில் மோதாமல் தவிர்க்க, வேறொரு சுவர் பக்கம் பேருந்து திருப்பி மோதியுள்ளார். ஆனால், சுவரை உடைத்துக்கொண்ட சென்ற பேருந்து, மறுபக்கம் நின்ற லாரி மீது பக்தர்கள் பேருந்து மோதியது. உடனடியாக பேருந்தில் இருந்த 50 பயணிகளும் இறக்கப்பட்டனர். எனினும், பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
X

Thanthi TV
www.thanthitv.com