பிரக்ஞானந்தாவிற்கு சொகுசு கார்... ஆனந்த் மஹிந்திரா கொடுத்த இன்ப அதிர்ச்சி

தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கார் பரிசளித்துள்ளார். பிரக்ஞானந்தாவைப் பாராட்டும் வகையில் கார் பரிசளிக்க விரும்புவதாக கடந்த ஆண்டு ஆனந்த் மஹிந்திரா கூறி இருந்தார். இந்நிலையில், XUV-400 ரக காரை பெற்றுக்கொண்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, ஆனந்த் மஹிந்திராவிற்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்தினருடன் இணைந்து காரை பிரக்ஞானந்தா பரிசாக பெற்றுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com