அம்பானியின் அதிரடி அறிவிப்பு.. கலக்கத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்..

அம்பானியின் அதிரடி அறிவிப்பு.. கலக்கத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்..
Published on

ஜியோ ஏர் ஃபைபர் எனப்படும் 5 ஜி வயர்லெஸ் இணைய சேவை, வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்கப்படும் என ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அந்நிறுவனத்தின் 46-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், ஃபபர் ஆப்டிக் கேபிள்களுக்கு இணையாக ஜியோ ஏர் ஃபைபர் இணைய சேவையை வழங்கும் என தெரிவித்தார். ரிலையன்ஸ் நிறுவனம் ஓராண்டில் 2.60 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக கூறினார். மேலும், ஜியோ நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 1.19 லட்சம் கோடியாகவும், குழும நிறுவனங்களின் வருமானம் 9.80 லட்சம் கோடியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com