AI Summit | உலகையே மிரளவைத்த இந்தியாவின் சாதனை - சிலிர்த்து பேசிய பிரான்ஸ் அதிபர்
உலகையே மிரளவைத்த இந்தியாவின் சாதனை - சிலிர்த்து பேசிய பிரான்ஸ் அதிபர்
உலகையே மிரளவைத்த இந்தியாவின் சாதனை - சிலிர்த்து பேசிய பிரான்ஸ் அதிபர் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை உலகுக்கு முன்மாதிரியாக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாராட்டு தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் பேசிய அவர், உலகில் எந்த நாடும் உருவாக்காத வகையில் 140 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளத்தை இந்தியா உருவாக்கியுள்ளதாக பாராட்டினார். 10 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிக் கணக்கு கூடத் திறக்க முடியாத தெருவோர வியாபாரி, இன்று மொபைல் மூலம் பணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். மனிதகுல நலனுக்காக ஏஐ முக்கிய பங்காற்றும் என்றும், தொழில்நுட்பத்தை மனிதநேயத்துடன் இணைத்து இந்தியா–பிரான்ஸ் இணைந்து எதிர்காலத்தை வடிவமைக்கும் என்றும் மேக்ரான் கூறினார்.
