

அபிநந்தனை மீட்க அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நாராயணசாமி, மத்திய அரசு உடனடியாக பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள அபிநந்தனை பத்திரமாக மீட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.