ஓடும் பேருந்தில் திடீரென திறந்த கதவு..கீழே விழுந்த பள்ளி மாணவன்
Keralam | ஓடும் பேருந்தில் திடீரென திறந்த கதவு..கீழே விழுந்த பள்ளி மாணவன்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே ஓடும் தனியார் பேருந்தில் இருந்து பள்ளி மாணவர் கீழே விழுந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிறுத்தத்திற்கு முன்பாகவே கதவு திடீரென திறந்ததால், இறங்குவதற்காக நின்றிருந்த மாணவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவருக்கு முகம் மற்றும் தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பேருந்தை பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களின் உரிமங்களையும் ரத்து செய்துள்ளனர்.
