ஹைதராபாத்தில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்
ஹைதராபாத்தில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்
Summary
ஹைதராபாத்தில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயது சிறுவன் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது......
மதுரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீதியில் கார் ஒன்று தாறுமாறாக வந்தது.
இதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அங்கிருந்த 7 இரு சக்கர வாகனங்களில் மோதிய கார், முதியவர் மீதும் மோதியது.
விபத்தில் முதியவர் ஒருவர் காருக்கு அடியில் சிக்கிக் கொண்ட நிலையில் பொதுமக்கள் அவரை போராடி மீட்டனர்.
தொடர்ந்து காரில் இருந்த 17 வயது சிறுவனை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்....
போலீசார் அச்சிறுவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அவ்வீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
