15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை தந்தையே செய்த அசிங்கம்

x

விழுப்புரத்தில், 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சிறுமியின் தந்தை, 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியை காணவில்லை எனத் தேடிவந்த நிலையில், சிறுமி அவரது பக்கத்து கிராமத்தில் இளைஞர் ஒருவரது வீட்டில் மீட்கப்பட்டார். இது குறித்த விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தெரியவந்தது. இதில், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மேற்படி நடத்திய விசாரணையின் படி, சிறுமியில் தந்தை உட்பட 6 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் பலருக்கும் சம்பந்தம் உள்ளதாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்