Maida | மொத்தமாக குழிதோண்டி புதைக்கப்பட்ட `மைதா’

உ.பி.யில்1,300 கிலோ போலி மைதா பறிமுதல் உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளுக்கு அனுப்புவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,300 கிலோ போலி மைதா மாவை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். தரம் குறைந்த ரசாயனங்கள் கலந்த மைதா, ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் துரித உணவகங்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மீண்டும் சந்தைக்கு செல்லாமல் தடுக்க, ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி, பறிமுதல் செய்யப்பட்ட முழு மைதா மாவையும் அதிகாரிகள் அழித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com